இந்திய இழுவைப் படகால் இலங்கை கடல் வளங்களுக்கு பாதிப்பு- அன்னராசா கவலை!

யாழ் மாவட்ட கடற் தொழில் கூட்டுறவு சங்க சமாசங்களின் சம்மேளனத்தின் தலைவர் அன்னலிங்கம் அன்னராசாவின் ஊடக சந்திப்பு நேற்றையதினம் யாழில் நடைபெற்றது.

குறித்த ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அவர்,

இந்திய மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடி தடை செய்யப்பட வேண்டும் அதேவேளை நம் அரசாங்கம் நினைத்தால் நடக்காதது ஒன்றுமில்லை. கைது செய்கின்ற மீன்பிடியினரை உடனடியாக நீதிமன்றத்துக்கு அனுப்ப வேண்டும் . கைப்பற்றுகின்ற படகுகளை ஏலத்தில் விட வேண்டும் என்று தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் ,

இலங்கை மிக நெருக்கடியான பொருளாதார பிரச்னையில் சிக்கிக்கொண்டிருக்கும் வேலையிலே , வடக்கு கடற் தொழிலார்கள் மிகவும் பாதித்து கொண்டிருக்கின்றனர் .
குறைந்த அளவிலான எரிபொருளே எங்களுக்கு கிடைக்கின்றது .

அந்த எரிபொருளை வைத்து குறிப்பிடட தூரம் வரை சென்றுதான் தொழிலில் ஈடுபட முடியும் . வாரத்துக்கு ஒரு முறை ,மாதத்திற்கு 4,5 முறைதான் என்ற அடிப்படையிலேயே தொழிலுக்குசெல்லுகின்றோம் . வடக்கு மக்கள் மிக சிரமத்தை எதிர் கொள்ளும் இந்த நிலையில் ,இந்தியாவில் ராமேஸ்வரம் ,தொன்றி , காரைக்கால் போன்ற இடங்களில் இருந்து வந்து ,இங்கு எங்களுக்கு சொந்தமான இடங்களில் மீன்பிடி தொழில் ஈடுபடுகின்றனர் .

எங்களுடைய கடற்கரையில் இருந்து 8 கடல் மைல் தூரத்தில் வந்து இழுவை மடி தொழிலை செய்கின்றனர் . இதனால் எங்களுடைய வாழ்வாதாரம் முற்று முழுதாய் பாதிப்பிற்குள்ளாகின்றது .

நேற்றைய தினத்தில் 8கடல் மைல் தொலைவில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த வேளையில் ஒரு படகுடன் 12 நபர்கள் மாத்திரமே இலங்கை அரசினால் கைது செய்ய பட்டனர் . மிகுதி படகுகள் திரும்பி சென்றுவிட்ட்னர் .

எங்களுடைய வாழ்வாதாரத்தை இந்தியர்கள் அளித்து வருகின்றனர் . இவர்கள் இங்கு வந்து மீன்பிடி தொழில் ஈடுபடுகின்றனர் என்ற முழு ஆதாரங்களும் இங்கு காணப்படுகிறது . எங்களுடைய தலைமையங்கள் மற்றும் , அரசியல் வாதிகளுக்கும்இது பற்றிய விளக்கம் ,இனி எதிர் கொள்ள போகும் பிரச்னை பற்றி எடுத்துரைத்து விட்டோம் . யாரும் இதற்க்கு செவி சாய்க்கவில்லை .

இந்திய கடற் தொழிளார்கள் இங்கு வந்து இழுவை மடி தொழில் செய்வதை முற்றாக நிறுத்த வேண்டும் . அதே போன்று எங்களுடைய கடற் படையினரும் , எங்கள் வளத்தை பாதுகாக்கும் விதத்தில் , எல்லைதாண்டி வருகின்ற படகுகளை கைது செய்ய வேண்டும்.

மீனவர்களை நல் எண்ண அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும் .படகுகளை சட்டத்தின் முன்னால் நிறுத்தி , தடை செய்யபட்ட தொழில்கள் அனைத்தையும் நாங்கள் எங்களுடைய நீதி மன்றமும் ,கடற் படையும் நினைத்தால் , 100% கட்டுப்படிற்குள் கொண்டு வர முடியும் .

அந்த படகுகள் அரச உடமை ஆக்கப்பட வேண்டும் . கடந்த காலத்தில் ஏலம் விட்டதுபோன்று , இனியும் நீதி மன்றம் ஊடக படகுகள் ஏலம் விடப்பட வேண்டும். இழுவைப்படகாக இருந்தாலும் சரி ,நாட்டு படகாக இருந்தாலும் சரி கைது செய்து சடடத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்று தெரிவித்தார் .

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *