யாழில் இருந்து ஆரம்பமான கதிர்காம பாதையாத்திரை மட்டக்களப்பினை வந்தடைந்தது!

யாழ்ப்பாணம்; தொண்டமனாறு செல்வச்சந்நிதியில் ஆரம்பமான கதிர்காம பாதையாத்திரை நேற்று (திங்கட்கிழமை) மாலை மட்டக்களப்பினை வந்தடைந்ததுடன் இன்று காலை கதிர்காமம் நோக்கி பாதயாத்திரை ஆரம்பமானது.

கடந்த மாதம் 04ஆம் திகதி செல்வசந்நிதி முருகன் ஆலயத்தில் நடைபெற்ற வழிபாடுகளை தொடர்ந்து பாதயாத்திரை ஆரம்பமானது.

இம்மாதம் கதிர்காமத்தின் கொடியேற்றம் 29ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் இந்த பாதையாத்திரை கதிர்காமத்தினை நோக்கி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

நேற்று மாலை மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயத்திற்கு வருகைதந்த பாதயாத்திரை குழுவினர் இன்று காலை ஆலயத்தில் நடைபெற்ற சிறப்பு வழிபாடுகள்,கூட்டுப்பிரார்த்தனைகளை தொடர்ந்து கதிர்காமம் நோக்கி தமது பாதயாத்திரையினை ஆரம்பித்துள்ளனர்.

எதிர்வரும் 22ஆம் திகதி கதிர்காமத்திற்காக காட்டுவழிப்பாதை திறக்கப்படவுள்ள நிலையில் உகந்தைமலைசென்று அங்கிருந்து 22ஆம் திகதி காட்டுப்பாதையூடாக கதிர்காமத்திற்கு செல்லவுள்ளதாக பாதையாத்திரையில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *