எரிபொருள் நிலையத்தில் வாக்குவாதம்: இராணுவ சிப்பாய் மீது கத்திக்குத்து!

எம்பிலிபிட்டிய – இரத்தினபுரி வீதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் பாதுகாப்புக் கடமையிலிருந்த இராணுவ சிப்பாய் ஒருவர் தாக்கப்பட்டு காயமடைந்து எம்பிலிப்பிட்டிய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

எரிபொருளை பெற்றுக் கொள்வதற்காக வந்த சிலர், எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டபோது அதனைத் தடுக்க முற்பட்ட போது, அவர்களில் ஓர் இராணுவ சிப்பாயை கத்தியால் குத்தியதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் தப்பிச் சென்ற நிலையில் அவர்களைக் கைது செய்வதற்கு பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *