சுகாதார சேவைகள் முடங்கும் அபாயம்

கொழும்பு, ஜூலை 05

பொது போக்குவரத்து சேவையை வலுப்படுத்தாவிட்டால், அடுத்த வாரத்திலிருந்து வைத்தியசாலை நடவடிக்கைகள் பாதிப்படையுமென சுகாதாரப்பிரிவு தெரிவித்துள்ளது.

பொது போக்குவரத்து சேவைகளை பயன்படுத்தி வைத்தியசாலை கடமைக்கு சமூகமளிப்பதற்கு சுகாதார ஊழியர்கள் தயாராகவிருப்பதாக பொரளை சீமாட்டி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலை பணிப்பாளர், வைத்தியர் ஜீ.விஜேசூரிய தெரிவித்துள்ளார்.

எனவே, இதனை கருத்திற்கொண்டு போதுமானளவு பஸ் சேவைகளை முன்னெடுக்குமாறு போக்குவரத்து அமைச்சிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *