இரண்டாம் நாள் அமர்வு இன்று காலை 10 மணிக்கு சபாநாயகர் மஹிந்த ராஜபக்ச தலைமையில் ஆரம்பமானது.
இந்நிலையில் இன்றையதினம் நாட்டின் தற்போதைய நிலை தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உரையாற்றியதுடன் சமவேளையில் சபை அமர்வில் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச பங்கெடுத்திருந்தார்.
இந்நிலையில் எதிர்த்தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்களால் ஜனாதிபதிக்கு எதிராக கோ கோம் கோட்டா கோசங்களை எழுப்பி எதிர்ப்பில் ஈடுபட்ன நிலையில் சபை அமர்வு சிறிது நேரம் ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் சற்றுமுன் மீண்டும் சபை ஆரம்பமானதை தொடர்ந்து எதிர்க்கட்சியினர் தமது ஆசனங்களில் இருந்து எழுந்து அரசாங்கத்திற்கு எதிராக கோசங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


பிற செய்திகள்