அவசர நன்கொடை அவசியம்! தேசிய இரத்த மாற்று சேவையின் கோரிக்கை

அனைத்து நலம் விரும்பிகள் மற்றும் தன்னார்வலர்கள் முன்வந்து அறுவை சிகிச்சை உபகரணங்களை நன்கொடையாக வழங்குமாறு தேசிய இரத்த மாற்று சேவை, வேண்டுகோள் விடுத்துள்ளது.

சுகாதார அமைச்சின் ஊடாக, இது தொடர்பான வேண்டுகோள் ஒன்றை தேசிய இரத்த மாற்று சேவைப் பணிப்பாளர் விடுத்துள்ளார்.

அனைத்து நலம் விரும்பிகள் மற்றும் தன்னார்வலர்கள் இந்த பணியை முன்னெடுத்துச் செல்ல உதவுமாறு அவர் கோரியுள்ளார்.

அதன்படி, தன்னார்வலர்கள் தங்களால் இயன்ற அறுவை சிகிச்சை உபகரணங்கள் மற்றும் பொருட்களை விரைந்து நன்கொடையாக வழங்குமாறு அவர் கேட்டுள்ளார்.

இந்த அறுவை சிகிச்சை பொருட்களை வழங்குவதன் மூலம் ஆயிரக்கணக்கான உயிர்களைக் காப்பாற்ற முடியும் என்று தேசிய இரத்த மாற்று சேவைப் பணிப்பாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *