நேற்று இரவு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் இடம்பெற்ற ஆளும் கட்சி கூட்டத்தில் பெருமளவான உறுப்பினர்கள் கூட்டத்தை புறக்கணித்திருந்தனர்.
இந் நிலையில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, நாமல் ராஜபக்ச ஆகியோர் கலந்து கொண்டிருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எரிபொருள், எரிவாயு போன்றவற்றை மக்கள் கேட்கும் போது காணி உறுதிப்பத்திரம் வழங்குவது தொடர்பில் அரசாங்கம் பேசுவதாக முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி சரத் வீரசேகர விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
மேலும், 21ம் அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிர்ப்பை வெளியிட்டுள்ள சரத் வீரசேகர, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் அதிகாரங்களைக் குறைப்பதற்கு தாம் ஆதரவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இந்த அரசியல் செயற்பாடுகல் குறித்து சலித்துக்கொண்ட சரத் வீரசேகர எதிர்காலத்தில் அரசியல் தீர்மானம் ஒன்றை எடுக்கவுள்ளதாக அங்கு குறிப்பிட்டுள்ளார்.
பிற செய்திகள்