ஊடகவியலாளர்களுக்கான அறையின் WiFi துண்டிப்பு

கொழும்பு, ஜூலை 05

நாடாளுமன்றத்தில்
ஊடகவியலாளர்களுக்கான அறையின்
“வைஃபை” (WiFi) கட்டணம்
செலுத்தப்படாததால்
துண்டிக்கப்பட்டுள்ளதாகவும்
ஊடகவியலாளர்கள் தமது பணிகளை
மேற்கொள்வதில் சிரமத்தை
எதிர்கொண்டுள்ளதாகவும் கொழும்பு மாவட்ட
நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான்
இன்று (05) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

இந்த விடயம் தொடர்பில் ஆராய்ந்து உடனடி
தீர்வுகளை வழங்குமாறும் அவர் கோரிக்கை
விடுத்துள்ளார்.

இதற்குப் பதிலளித்த பிரதி சபாயநாகர் இது
தொடர்பில் கவனம் செலுத்துவதாக அவர்
தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *