பொதுமகனை காலால் உதைத்த இராணுவ அதிகாரி அனைத்து கடமைகளில் இருந்தும் விடுவிப்பு

குருணாகலை – யக்கஹாபிட்டியவில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பொதுமக்களை தாக்கிய சம்பவத்தில் ஈடுபட்ட இராணுவ அதிகாரி அனைத்து கடமைகளில் இருந்தும் விடுவிக்கப்பட்டுள்ளதாக இலங்கை இராணுவம் இன்று தெரிவித்துள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் முடியும் வரை லெப்டினன்ட் கேணல் அனைத்துப் கடமைகளில் இருந்தும் விடுவிக்கப்பட்டுள்ளதாக இராணுவம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

அதன்படி, இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகேவின் பணிப்புரைக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், இச்சம்பவம் குறித்து ஸ்ரீலங்கா இராணுவப் படைப் பிரிவின் சமாந்தரமான இராணுவ விசாரணையும் வாக்குமூலங்களைப் பதிவுசெய்து வருகின்றது.

மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகம் திங்கட்கிழமை (4) இந்த சிரேஷ்ட அதிகாரியின் நடத்தை தொடர்பான பிரச்சினையை ஆராய்ந்து அதன் பரிந்துரைகளை வழங்குவதற்காக பிரிகேட் கமாண்டர் தலைமையில் ஐந்து பேர் கொண்ட விசாரணை நீதிமன்றத்தை நியமித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *