என்னால் பிரதமராக முடியாதா? அனுர கேள்வி

பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதவி விலகினாலும் என்னை பிரதமராக நியமிப்பதற்கு அவருக்கு அதிகாரம் இல்லை என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஆறு மாதங்களுக்குள் பொருளாதாரத்தை மீட்டெடுக்க முடிந்தால், அனுரகுமார திஸாநாயக்கவுக்கு பிரதமர் பதவியை விட்டுக்கொடுக்க தயார் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறியதற்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தனது அறிக்கையின் ஒரு பகுதியை மாத்திரமே பிரதமர் எடுத்துக்கொண்டதாக தெரிவித்த அனுர, மக்களின் அடிப்படைத் தேவைகளான எரிபொருள், எரிவாயு, மருந்து போன்றவற்றை ஆறு மாதங்களுக்குள் வழங்க வேண்டும் என்றும் அதன் பின்னர் தேர்தலுக்குச் செல்ல வேண்டும் என்றே தான் கூறியதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ரணில் விக்கிரமசிங்கவுக்கோ அல்லது தனக்கோ பிரதமராக செயற்படுவதற்கான ஆணை இல்லை என்றும் ரணிலுக்கு நாடாளுமன்றத்தில் அமரக்கூட ஆணை இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *