
எரிபொருளும் சுகாதார சேவையாளர்களும். பல சுகாதார சேவையாளர்களின் இன்றைய போக்குவரத்து நிலமை கவலைக்கிடமாகவுள்ளது.நாளை கடமைக்கு வருவதற்காக இன்றே பலரிடம் எரிபொருள் கடன் கேட்கும் நிலையில் உள்ளனர்.
அரசினால் ஒழுங்கு செய்யப்பட்ட முறைகளுக்கு இணங்க கல்முனை பிரதேசத்தில் எரிபொருள் வழங்கப்படவில்லை. வெள்ளிக்கிழமை எரிபொருள் பெறுவதற்காக, அனுமதி அட்டைகளுடன் சேவையாளர்கள் வியாழக்கிழமை வாகனங்களை வரிசைப்படுத்த வேண்டிய நிலையில் உள்ளனர். இரவுக்கடமையாளர்கள் கடமையை தவிர்க்க வேண்டியுள்ளது.
மறுநாள் காலையில் மதியம் 11 மணியளவில் எரிபொருள் கிடைத்தாலும் அன்று கடமை செல்லமுடியாதுள்ளது.பலர் இரவுவரை காத்திருக்கின்றனர்.
சென்றவாரம் இரவு 11.30 வரை காத்து நின்றவர்கள் , எரிபொருள் முடிவுற்றமையினால் ஏமாற்றத்துடன் அன்றைய கடமையையும் இழந்து வீடு சென்றுள்ளனர்.
பெற்றவர்கள் கூட மோட்டார் சைக்கிள்களுக்கு 2000/= இற்கும் கார்களுக்கு 5000/= இற்குமே நிரப்பப்பட்டுள்ளது.இது வாரத்திற்கு போதுமானதாக இல்லை.
இந்த அவலத்தை கருத்திற் கொண்டு இதனை நிவர்த்தி செய்ய உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? என ஊழியர் சங்கங்கள் எதிர்பார்கின்றன.
இதே வேளை சுகாதார சேவையாளர்களுக்கு தனியாகவும், ஒரு நாளையும் ஒதுக்கிய விஷயத்தில் திட்டத்தை பாராட்டுவதுடன் , கல்முனை பிரதேசத்தில் சேவையாளர்களின் வாகன விவரங்களுக்கு அமைவாக எரிபொருள் நிரப்பு நிலையங்களை அதிகரித்து தேவையான எரிபொருளையும் அன்றைய தினம் வழங்க உதவுமாறும் கேட்கின்றனர்.
குறிப்பாக 500 கார்களாயின் 500×20=10000 Lம் 2000 மோட்டார்சைக்கிள்கள் எனில் 2000×8=16000 L, 26000 L தேவை.
இதற்கு 3 எரிபொருள் நிரப்பு நிலையங்களும் ஒவ்வொரு நிலையத்திலும் 9000 L எரிபொருளும் தேவை , இவ்வாறு இல்லாவிட்டால் ஏமாறுபவர்களும், ஏமாற்றுபவர்களும் இருக்கத்தான் செய்வார்கள். வாராந்தம் சேவையாளர்களும் மிக அவதிநிலையையே எதிர்நோக்குவர்.
இதனால் பொதுமக்கள் சேவைகளை திருப்திகரமாக பெறுவதில் பாதிக்கப்படும் நிலை ஏற்படலாம்.