டிசம்பர் வரையில் டொலர் பிரச்சினை தீவிரமாகும்: கபீர் ஹாசிம்

கொழும்பு,ஜுலை 6

எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்தில் கடன் மீளமைப்பு தொடர்பான அறிக்கை வெளியாகும் என்று ரணில் விக்கிரமசிங்க கூறினாலும் அது இடம்பெறாது என்று எதிர்கட்சி தெரிவித்துள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் இந்த கருத்தை, இன்று நாடாளுமன்றில் வெளியிட்டுள்ளார்.

இந்தநிலையில் இந்த அறிக்கையை வெளியிட குறைந்தது 6 மாதங்கள் அல்லது ஒரு வருடமாகும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்

இதன் காரணமாக எதிர்வரும் டிசம்பர் வரையில் டொலர் பிரச்சினை தீவிரமாகும் என்று கபீர் ஹாசிம் தெரிவித்துள்ளார்.

எனவே ஜூலை மாதம் முதல் டிசம்பர் வரையில் எரிபொருள் உட்பட்ட அவசிய கொள்வனவுகளுக்காக 3 பில்லியன் டொலர்களை பெற்றுக்கொள்வதில் பிரச்சினை இருக்கும் என்றும் கபீர் ஹாசிம் எதிர்வுகூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *