ராஜபக்சக்களுக்கு எதிரான அடிப்படை உரிமைகள் மனு பரிசீலனை திகதி அறிவிப்பு!

நாட்டைப் பொருளாதார நெருக்கடிக்கு இட்டுச் சென்ற அனைவருக்கும் எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமைகள் மனு பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

குறுகிய நோக்குடன் செயற்பட்ட ராஜபக்ஷ அரசாங்கத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட குறித்த மனு எதிர்வரும் 27ம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என நீதிமன்றம் அறிவித்துள்ளது.

பிரபல இலங்கை நீச்சல் வீரரும் பயிற்சியாளருமான ஜூலியன் பொலிங், இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் சந்திர ஜயரத்ன உள்ளிட்டவர்களினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது.

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, டபிள்யூ.டி.லக்ஷ்மன் மற்றும் அஜித் நிவார்ட் கப்ரால் மற்றும் மத்திய வங்கியின் நாணயச் சபை பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

இந்த மனு நீதியரசர்களான ஜயந்த ஜயசூரிய, எல்டிபி தெஹிதெனிய மற்றும் யசந்த கோதாகொட ஆகியோர் முன்னிலையில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *