செப்டம்பர் 30 வரை மாத்திரம் வரி செலுத்துவோருக்கு சலுகை

கொழும்பு,ஜுலை 6

எதிர்வரும் செப்டம்பர் மாதம் 30 ஆம் திகதிக்கு முன்னர் நிலுவையில் உள்ள சகல வரிகளையும் செலுத்துமாறு இறைவரித் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

எதிர்வரும் செப்டம்பர் மாதம் 30 ஆம் திகதிக்கு முன்னதாக வரிச் செலுத்துவோருக்கு சலுகை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

அதன்படி, முன்கூட்டிய தனிநபர் வருமானவரி, தங்குமிட வரி, முன்கூட்டிய வருமான வரி, முத்திரை வரி மற்றும் சூதாட்ட வரிகளைச் செலுத்துமாறு அந்த திணைக்களம் கோரியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *