
கொழும்பு,ஜுலை 6
ரயில் பணியாளர்களின் பணிப்புறக்கணிப்பினால் ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்கள் காரணமாக பல இடங்களில் ரயில் நிலைய அதிபர்கள் கடமைகளில் இருந்து விலகியுள்ளனர்
ரயில் நிலையங்களில் இராணுவத்தினரை பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்துமாறு ரயில் நிலைய அதிபர்கள் சங்கத்தின் தலைவர் சுமேத சோமரட்ன தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் 170 ரயில் சேவைகள் இடம்பெற வேண்டிய நிலையில் 25 சேவைகள் மாத்திரமே இடம்பெறுகின்றது.
ரயில் கட்டுப்பாட்டாளர்கள் சங்கம் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் பணியிலிருந்து இடைவிலகி தொழிற்சங்க போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
தாம் கடமைகளுக்கு சமுகமளிப்பதற்கு போக்குவரத்துக்கான எரிபொருள் இல்லை என தெரிவித்து அவர்கள் குறித்த பணிப்புறக்கணிப்பினை முன்னெடுத்து வருகின்றனர்.