
ஹிருணிக்கா பிரேமச்சந்திர உள்ளிட்ட 07 பேர் கைது!
கொழும்பு கோட்டை ஜனாதிபதி மாளிகைக்கு முன்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஹிருணிக்கா பிரேமச்சந்திர உள்ளிட்ட 07 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு வழங்குமாறும் ஜனாதிபதி உடனடியாக பதவி விலக வேண்டும் எனவும் கோரிக்கைகளை முன்வைத்து ஹிருணிக்கா பிரேமச்சந்திர உள்ளிட்ட குழுவினர் எதிர்ப்பில் ஈடுபட்ட நிலையில் கைது செய்யப்பட்டுள்ளனர்