கற்பிட்டியிலிருந்து கொழும்பிற்கு சொகுசு வாகனத்தில் கேரளா கஞ்சா கடத்திச் சென்ற நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நுரைச்சோலைப் பொலிஸாருக்குக் கிடைக்கெப்பெற்ற இரகசியத் தகவலுக்கமைய இன்று அதிகாலை குறித்த பகுதி சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.
இதன்போது, 212 கிலோ கேரளா கஞ்சாவுடன் சந்தேகத்தின் பேரில் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் தெரியவருகையில்,
கற்பிட்டி கொழும்பு பிரதான வீதியின் கரம்பை பகுதியில் உள்ள சோதனைச் சாவடியில் கடற்படையிரின் உதவியுடன் வாகனத்தை மறித்து சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
இதன்போது குறித்த வாகனத்தில் 212 கிலோ கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டதாக நுரைச்சோலைப் பொலிஸார் தெரிவித்தனர்.
கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரையும் கைப்பற்றப்பட்ட கேரளா கஞ்சா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட சொகுசு வேனையும் புத்தளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளை நுரைச்சோலைப் பொலிஸார் தொடர்ந்தும் மேற்கொண்டு வருகின்றனர்.





பிற செய்திகள்