பள்ளகெட்டுவ பகுதியில் ஆணொருவரின் சடலம் மீட்பு

பள்ளகெட்டுவ,ஜுலை 6

பள்ளகெட்டுவ இந்தகல பகுதியில் விறகு சேகரிக்க சென்ற நபர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதன்கிழமை காலை விறகு சேகரிக்க சென்ற நிலையிலே குறித்த ஆண் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தோட்டத்தில் கடமை புரிபவர்களினால் குறித்த நபரின் சடலம் கண்டுப்பிடிக்கப்பட்டமையை தொடர்ந்து பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடதக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *