20 கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைதான பெண்!

பொரலஸ்கமுவ, பெபிலியான பிரதேசத்தில் ஹெரோயின் மற்றுமு் போதைப்பொருளுடன் பெண் ஒருவர் விஷேட அதிரடிப்படையினரால் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவமானது இன்றைய தினம் இடம்பெற்றுள்ளது.

விஷேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய மேற்கொண்ட சுற்றிவளைப்பில் குறித்த பெண்ணை கைது செய்ய்ப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட பெண்ணிடம் இருந்து நான்கு இலட்சம் ரூபா பெறுமதியான போதைப்பொருள் மற்றும் 21 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பணமும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

சம்பவத்தில் 33 வயதான பெண் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

சந்தேகநபராக பெண் போதைப்பொருள் மற்றும் பணத் தொகையுடன் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *