காரைநகர் ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் குழப்பம்!

காரைநகர் ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பெட்ரோல் விநியோகம் திடீரென இடைநிறுத்தப்பட்டு டீசல் விநியோகம் ஆரம்பிக்கப்பட்டதால் குழப்பநிலை ஏற்பட்டது.

காரைநகர் எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு இன்றைய தினம்(புதன்கிழமை) காலை பெற்றோல் மற்றும் டீசல் என்பன வந்திறங்கிய நிலையில் காலை 8 மணியளவில் முச்சக்கர வண்டிகள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் சிலவற்றுக்கு பெற்றோல் நிரப்பட்ட நிலையில் திடீர் ஏன பெற்றோல் விநியோகம் இடைநிறுத்தப்பட்டது.

டீசல் வழங்குவதற்காக பெற்றோல் விநியோகம் இடைநிறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்ட போதும் பின்னர் பெற்றோல் பம்பி பழுதடைந்துவிட்டதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் அங்கு நீண்ட வரிசையில் காத்திருந்தோர் எதிர்ப்பு நவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பிரதேச செயலாளருக்கு அறிவிக்கப்பட்டது. எனினும் அவர் அங்கு வருகை தரவில்லை.

யாழ்ப்பாணம் – காரைநகர் சேவையில் ஈடுபட்ட பேருந்துகளும் தடுத்துநிறுத்தப்பட்டன. பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் வீடு திரும்புவதற்கு தடை ஏற்படுத்தப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *