இலங்கை டெஸ்ட் அணியில் மேலும் 2 வீரர்களுக்கு கொவிட்!

இலங்கை டெஸ்ட் அணியில் மேலும் 2 வீரர்கள் கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சகலதுறை வீரர் தனஞ்சய டி சில்வா, சுழற்பந்து வீச்சாளர் ஜெஃப்ரி வெண்டர்சே ஆகியோர் கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதன்படி நாளை காலியில் ஆரம்பமாகும் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இவர்கள் இருவரும் இடம்பெறமாட்டார்களென ஸ்ரீலங்கா கிரிக்கெட் தெரிவித்துள்ளது.

அந்த வீரர்களுக்காக சுழற்பந்து வீச்சாளர்களான பிரபாத் ஜயசூரிய மற்றும் லக்ஷான் சந்தகென் ஆகியோர் குழாமிற்கு அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று நடத்தப்பட்ட ரெபிட் அண்டிஜென் சோதனையின் போது குறித்த வீரர்கள் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி இருப்பது கண்டறியப்பட்டது.

ஏனைய வீரர்கள் மற்றும் துணைப் பணியாளர்கள் ஆகியோர் ரெபிட் அண்டிஜென் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். எனினும் அவர்களின் பெறுபேறு எதிர்மறையாக இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, முன்னதாக கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த ஏஞ்சலோ மெத்யூஸ் தற்போது அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

கொவிட் தொற்றுக்கு உள்ளான பிரவீன் ஜயவிக்ரமவும் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *