
கிளி, ஜுலை 07
கிளிநொச்சி முழங்காவில் நாச்சிக்குடா பகுதியில் 3600 லீற்றர் மண்ணெண்ணெய்யுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட நபரிடம் முழங்காவில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
விசாரணைகளின் பின்னர் அவர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடதக்கது. குறித்த நபரிடம் இருந்து மீட்கப்பட்ட மண்ணெண்ணெய் வெள்ளை நிறமானது எனவும் இலங்கையில் பயன்படுத்தப்படும் மண்ணெண்ணெயிலிருந்து வேறுபட்டு காணப்படுவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைப்பற்றப்பட்ட மண்ணெண்ணெய் இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.