
திருகோணமலை மாவட்டத்தின் வான் எல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காட்டுபகுதிக்குள் விறகு எடுக்க சென்ற ஒருவரை காட்டு யானை தாக்கியதையடுத்து, கந்தளாய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இச்சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக வான்எல பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இச்சம்பவத்தில் 57 வயதுடைய டி.டி.ஆரியரத்தின எனும் நான்கு பிள்ளைகளின் தந்தையொருவரே உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
வீட்டில் எரிவாயு முடிந்த நிலையில், சமைப்பதற்காக காட்டுப் பகுதியில் விறகு எடுக்க சென்ற போதே மறைந்திருந்த காட்டு யானை தாக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சடலம் கந்தளாய் தள வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
பிற செய்திகள்