எரிபொருள் வரிசையில் மாடொன்று காத்திருந்த சம்பவம் தம்புள்ளையில் பதிவாகியுள்ளது.
தம்புள்ளை – அத்துபாராய பிரதேசத்தை சேர்ந்த ஆர்.எம்.ரத்நாயக்க என்பவரே, தனது மோட்டார் சைக்கிளின் இலக்கத்தை பசு மாட்டின் உடலில் எழுதி எரிபொருள் வரிசையில் கட்டிவிட்டுச் சென்றுள்ளார்.
இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது,
50 பசு மாடுகளை வைத்து பால்விற்பனை செய்யும் குறித்த விவசாயி, கால்நடைகளுக்கான வேலைகளால் எரிபொருளை பெற்றுக் கொள்வதில் பெரும் சிரமப்பட்டுள்ளார்.
எரிபொருள் வரிசையில் காத்திருக்க முடியாமல், ஏனைய தேவைகளை பூர்த்தி செய்வதற்காக தனது பசுமாட்டினை இவ்வாறு கட்டி வைத்து சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.
பல நாட்கள் வரிசையில் காத்திருந்தும் பெற்றோல் கிடைக்காமல், தினசரி வேலைகளை முடித்துவிட்டு மீண்டும் வரிசையில் நிற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
மேலும், பல சமயங்களில் மோட்டார் சைக்கிளை வரிசையில் விட்டு மாடுகளுக்குரிய வேலைகளை முடித்து திரும்பும் போது, ஏனைய குழுக்கள் மீண்டும் முன்னோக்கி செல்ல அனுமதிக்கவில்லை.
இவ்வாறான நிலையிலேயே, தன்னிடம் உள்ள 50 மாடுகளில் ஒன்றுக்கு உணவு, தண்ணீர் கொடுத்துவிட்டு, வரிசையிலுள்ள மின் கம்பத்தில் கட்டிவிட்டு, தனது வேலைகளுக்காக சென்றுள்ளார்.
பிற செய்திகள்