யானை தாக்குதலில் ஒருவர் பலி

திருமலை, ஜுலை 07

திருகோணமலை மாவட்டத்தின் வான்எல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காட்டு பகுதிக்குள் விறகு எடுக்க சென்ற ஒருவரை காட்டு யானை தாக்கியதை அடுத்து கந்தளாய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவத்தில் டி.டி. ஆரியரத்தின (57 வயது) எனும் 4 பிள்ளைகளின் தந்தை ஒருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

வீட்டில் எரிவாயு முடிந்த நிலையில் சமைப்பதற்காக காட்டுப் பகுதியில் விறகு எடுக்க சென்ற போதே மறைந்திருந்த காட்டு யானை தாக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சடலம் கந்தளாய் தள வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *