மட்டு நகரில் மாற்றுத் திறனாளிகளின் விளையாட்டு விழா!(படங்கள் இணைப்பு)

மட்டு நகரில் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு விழா இவ்வருடம் ஓகஸ்ட் மாதம் 20,21 ஆம் திகதிகளில் மட்டக்களப்பு வெபர் விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளது.

டேட்டா சரிட்டி ( DATA Charity ) , மட்டக்களப்பு மாற்றுத்திறனாளிகள் சம்மேளனம் ஆகியன இணைந்து நடாத்தும் இந்த விளையாட்டு விழாவில் கிழக்கு மாகாணத்தில் இருந்து (திருகோணமலை ,மட்டக்களப்பு , அம்பாறை ) 1000 க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொள்ளும் இந்த விளையாட்டு விழாவுக்கு பிரதான அனுசரணையை அபி டயமன்ட், ராஜ் கிளஸ்டர் மற்றும் லிங்க்ஸ் லீகல் ஆகிய நிறுவனத்தினர் வழங்குகின்றனர்

மட்டக்களப்பில் இருந்து 26 மாற்றுதிறனாளிகள் அமைப்புகளும் , அம்பாறையில் இருந்து 08 மாற்றுத்திறனாளிகள் அமைப்புக்களும் , திருகோணமலையில் இருந்து 04 மாற்றுத்திறனாளிகள் அமைப்புக்களும் இந்த விளையாட்டு விழாவில் கலந்து கொள்கின்றனர்.

தமிழ் பரா விளையாட்டு விழாவானது 2016 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு தொடர்ந்து 2017,2018 ஆகிய ஆண்டுகளில் வடக்கு மாகாணத்திலும் கிழக்கு மாகாணத்திலும் மிக பிரமாண்டமாக நடாத்தப்பட்டது .

அதன் தொடர்ச்சியாக 2020 ஆம் ஆண்டு விளையாட்டு போட்டிகள் நடத்துவதற்கு இருந்தன கொவிட் பரவல் காரணமாக இடையில் நிறுத்தப்பட்டு ,இப்போது மீண்டும் மட்டக்களப்பில் நடை பெறுகின்றன .

தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெறும் இந்த விளையாட்டு போட்டியின் முதல் அங்கமாக பார்வை இழந்தவர்களுக்கான சத்த பந்து கிரிக்கட் போட்டி இடம்பெறவுள்ளது . இந்த போட்டியில் மட்டக்களப்பை தளமாக கொண்டியங்கும் உதயம் விழிப்புலனிழந்தோர் சங்கத்தினரும் ,யாழ் விழிப்புலனிழந்தோர் சங்கத்தினரும் பங்கு பற்றவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *