யாழிற்கு வருகை தரும் சுற்றுலாப் பிரயாணிகளுக்கு எரிபொருளை பெற விசேட ஏற்பாடு!

நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலாப் பிரயாணிகளுக்கு எரிபொருள் விநியோக நடவடிக்கையில் விசேட ஏற்பாடு அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ம.பிரதீபன் தெரிவித்துள்ளார்.

தமக்கான எரிபொருளைப் பெற்றுத் தருமாறு கோரி பொதுஅமைப்புகள் சில, அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் யாழ்ப்பாணத்தில் தற்போது தங்கியுள்ள வெளிநாட்டுப் பிரஜாவுரிமை பெற்றவர்கள் இன்றையதினம் காலை யாழ் மாவட்ட செயலகத்தில் காலை 11.45 மணிக்கு மேலதிக அரசாங்க அதிபர் ம.பிரதீபனைச் சந்தித்தனர்.

இந்நிலையில் குறித்த சந்திப்பில் கருத்து தெரிவித்த மேலதிக அரசாங்க அதிபர்,

சுற்றுலாப் பயணிகளுக்கு டீசலை வழங்குவதற்கு உரிய ஏற்பாடுகளைச் சுற்றுலாத்துறையின் இணையத்தளம் மூலமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த இணையத் தளத்தினுள் பிரவேசித்து செயலி ஒன்றைத் தரவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். அதில் காட்டப்பட்ட விபரங்களைப் பூர்த்தி செய்து மின்னஞ்சல் செய்து கொள்ள அந்த மின்னஞ்சல் பதிவு செய்யப்படும்.

இலங்கை சுற்றுலாப் பணியகம் உரிய விண்ணப்பதாரிக்கு எத்தனை லீற்றர் டீசலை அனுமதிக்கலாமென தெரிவித்துப் பதிலை அனுப்பிக் கொள்ளும்.

டீசல் அனுமதி கிடைத்தவர்கள் மின்னஞ்சலை யாழ் கோண்டாவிலுள்ள இலங்கைப் போக்குவரத்துச் சபையின் டிப்போவிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் சென்று காட்டி டீசலைப் பெற்று விமான நிலையத்திற்குப் பயணிக்க முடியுமெனவும் மேலதிக அரசாங்க அதிபர் ம.பிரதீபன் தெரிவித்தார்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *