நாட்டில் கண்டெய்னருக்கு வந்த சோதனை!

நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பல்வேறு துறைசார் செயற்பாடுகளும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றன.

இதேவேளை டீசல் பற்றாக்குறையால் 90 சதவீத ஏற்றுமதி கொள்கலன் வாகனங்கள் இன்று (7) ஓடவில்லை என ஐக்கிய லங்கா கொள்கலன் போக்குவரத்து வாகன உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் திரு.சனத் மஞ்சுள தெரிவித்தார்.

ஏறக்குறைய 6,000 கன்டெய்னர் போக்குவரத்து வாகனங்கள் உள்ளன, ஆனால் தற்போது ஐநூறுக்கும் குறைவான வாகனங்கள் இயங்குகின்றன என்றார்.

கொள்கலன் போக்குவரத்து வாகனங்களுக்கு டீசல் விடுவிப்பதற்கு பெற்றோலிய கூட்டுத்தாபனம் எந்த ஏற்பாடும் செய்யவில்லை என்றும் திரு மஞ்சுளா கூறினார்.

கொள்கலன் போக்குவரத்து வாகனங்களுக்கு டீசல் விடுவிப்பதற்கான ஏற்றுக்கொள்ளக்கூடிய வேலைத்திட்டம் முன்வைக்கப்படாவிட்டால், அனைத்து கொள்கலன் போக்குவரத்து வாகனங்களும் இயங்குவதை நிறுத்தும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இறக்குமதி மற்றும் ஏற்றுமதி சரக்கு போக்குவரத்து சேவைகள் கன்டெய்னர் போக்குவரத்து வாகனங்களால் முழுமையாக மேற்கொள்ளப்படுவதால், அந்த சேவைகளுக்கு பெரும் இடையூறு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *