யாழ் மாவட்ட அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்ட முக்கிய மகஜர்

யாழ்ப்பாண மாவட்டத்தை ஆரோக்கியமான கட்டியெழுப்புவதற்கான பரிந்துரைகள் அடங்கிய மகஜர் ஒன்றினை , யாழ் மாவட்ட அரச அதிபர் க. மகேசன் மற்றும் வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா ஆகியோருக்கு கையளிக்கப்பட்டுள்ளது.

குறித்த மகஜரை யாழ் மக்களின் சார்பில், குடிசார் அமைப்புகளின் ஒன்றியம் மற்றும் உள்ளுராட்சி பெண் உறுப்பினர்களின் ஒன்றியமும் இணைந்து அரச அதிபரிடம் கையளித்துள்ளது.

குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

யாழ்ப்பாண மாவட்டதில் தற்போதைய சூழ்நிலையில காணப்படும் பொருளாதார நெருக்கடியானது, எமது மாவட்ட மக்களின் அன்றாட செயற்பாடுகளை பெரும் தாக்கத்தை விளைவிப்பதாக காணப்படுகின்றது.

இவற்றில் மிக முக்கியமான விடயங்களையும், பரிந்துரைகளையும் தங்களின் உயர்ந்த கவனத்திற்கு குடிசார் அமைப்புகளின் ஒன்றியம் மற்றும் உள்ளுராட்சி பெண் உறுப்பினர்களின் ஒன்றியம் இணைந்து யாழ் மக்களின் சார்பில் விழித்துக்காட்டுவதோடு இதில் தங்களின் ஆக்கப்பூர்வ் செயற்பாட்டையும் தலையீட்டையும் எதிர்பார்க்கின்றோம்.

  1. விவசாயிகள், கடற்தொழிலாளர்கள் மற்றும் கால்நடை வளர்ப்பாளர்களுக்கான அடிப்படை தேவைகளை நிவர்த்தி செய்வதற்கான முறைமைகளை செயற்படுதல்

பங்கீட்டு அட்டை நடைமுறை.
எரிபொருள், உரம் மற்றும் கால்நடை தீவனம் முன்னுரிமை படுத்தலும் வழங்கலும்
அரச அனுகூலங்களை துரிதப்படுத்தல்.
தொழில் தொடர்பான உண்மை தன்மையை வழிப்படுத்ததுவதற்கான குறித்த சங்க உறுதிப்படுத்தல்.
மேற்குறித்த விடயங்களை மேற்பார்வை செய்ய கண்காணிப்புக் குழுக்களை நியமித்தல்.

  1. அத்தியாவசிய பொருட்களின் பகிர்வு

பொருட்களின் தரத்தை கண்காணித்தல்
கட்டுப்பட்டு விலை, பொருட்களின் நிறை, பொருட்களை பதுக்குதல் போன்ற விடயங்களில் கூடிய அக்கறை எடுத்து தலையீட்டை மேற்கொள்ளுதல்
அரச தனியார் வளப்பகிர்வின் பொருத்தமான பயனாளிகளை அடையாளப்படுத்துதல்
சமூக செயற்பாட்டாளர்கள் உள்ளடங்களாக மாவட்ட மாதா கண்காணிப்பு குழுக்களை நிறுவுதல்
உற்பத்தி பொருட்களின் இலகு சந்தைப்படுத்தல் வழிமுறையை உருவாக்குதல்

  1. பாடசாலை கல்வி மாறும் சத்துணவு

கல்வி செயற்பாடுகளில் பாடசாலை நிர்வாகத்தின் தலையீட்டை பரீட்சித்தல்
மாணவர்களுக்கு கிடைக்க வேண்டிய சத்துணவு சரியான முறையில் கிடைக்க பரிந்துரைத்தல்.

போன்ற விடயங்களில் அதீத அக்கறை எடுப்பதன் மூலம் நிறைவான மற்றும் ஆரோக்கியமான யாழ்ப்பாணத்தை கட்டியெழுப்ப முடியும் என்பதை நாங்கள் தெரிவித்துக் கொள்கிறோம்.என குறிப்பிடப்பட்டுள்ளது.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *