பெற்றோல் 250: விசாரணைக்கு அழைக்கும் கோப் குழு

கொழும்பு,ஜுலை 7

பெற்றோல் மற்றும் டீசல் ஆகியவற்றை ஒரு லீற்றர் 250 ரூபாவுக்கு விற்பனை செய்ய முடியும் என இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளமை பாரதூரமானது.

இவ்விடயம் தொடர்பில் மக்கள் அதிக கவனம் செலுத்தியுள்ளார்கள். எரிபொருள் விலையேற்றம் தொடர்பில் ஆராய மின்சாரத்துறை மற்றும் வலுசக்தி, இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் அதிகாரிகள் எதிர்வரும் நாட்களின் கோப் குழுவுக்கு அழைக்கப்படுவார்கள் என கோப் குழுவின் தலைவர் பேராசிரியர் சரித ஹேரத் தெரிவித்தார்.

இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் 2018 மற்றும் 2019ஆம் ஆண்டுக்கான கணக்காய்வு அறிக்கை மற்றும் தற்போதைய செயலாற்றுகை தொடர்பில் ஆராய கோப் குழு நேற்றுக் (06) கூடியது.

எரிபொருள் கொள்வனவு செய்தல் மற்றும் வரி அறவிடல் ஆகியவற்றை முழுமையாக ஆராய்ந்ததை தொடர்ந்து 250 ரூபாவுக்கு எரிபொருளை விநியோகிக்க முடியும் என்பதை அறிய முடிந்தது. அதற்கமைய ஒரு லீற்றர் பெற்றோல் மற்றும் டீசலை 250 ரூபாவுக்கும் குறைவான விலைக்க விற்பனை செய்ய முடியும் என்பதை தனது தனிப்பட்ட கருத்தாக குறிப்பிட்டதாக ஜனக ரத்நாயக்க தெரிவித்தார்.

எரிபொருள் விலை தொடர்பில் பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவரின் கருத்து பாரதூரமானது.இவ்விடயம் தொடர்பில் மக்கள் அதிக கவனம் செலுத்தியுள்ளார்கள்.வலுசக்தி மற்றும் மின்சாரத்துறை அமைச்சின் அதிகாரிகள் ,பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் அதிகாரிகள் ஆகியோரை எதிர்வரும் நாட்களில் கோப் குழுவுக்கு அழைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *