கட்சித் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக உத்தியோகப்பூர்வமாக அறிவித்தார் பொரிஸ் ஜோன்சன்

பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன் கன்சர்வேடிவ் கட்சித் தலைவர் பதவியில் இருந்து இன்று ராஜிநாமா செய்துள்ளார்.

புதிய பிரதமர் வரும் வரை பிரதமர் பதவியில் தான் நீடிக்கப்போவதாகவும் அவர் தெரிவித்தார்.

கன்சர்வேடிவ் கட்சித் தலைமைக்கான தேர்தல் விரைவில் நடைபெறும்.

அக்டோபரில் நடைபெறவுள்ள கட்சி மாநாட்டுக்கு முன்னதாக புதிய பிரதமர் பதவிக்கு வருவார் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இன்று கட்சித் தலைவர் பொறுப்பிலிருந்து விலகுவதாக அறிவித்து உரையாற்றிய போதே இவ்வாறு தெரிவித்தார்.

‘நாடாளுமன்றத்தில் இருக்கும் கன்செர்வேடிவ் கட்சியினர் புதிய தலைவர் வேண்டும் என்று கூறிவிட்டனர். எனவே புதிய பிரதமரை தேர்ந்தெடுக்க வேண்டும்.’ எனவும் அவர் குறிப்பிட்டார்.

புதிய பிரதமரை தேர்வு செய்வதற்கான காலம் குறித்து அடுத்த வாரம் அறிவிக்கப்படும் என தெரிவித்த பொரிஸ் ஜோன்சன் புதிய பிரதமரை தேர்ந்தெடுக்கும் வரை தான் பதவியில் இருக்கப்போவதாக தெரிவித்தார்.

புதிய பிரதமருக்கு தன்னால் முடிந்த ஆதரவை வழங்கவிருப்பதாகவும் பொரிஸ் ஜோன்சன் தெரிவித்தார்.

பிரக்ஸிட்டை நிகழ்த்திக் காட்டியது, பிரித்தானியாவை பெருந்தொற்றிலிருந்து மீட்டு கொண்டு சென்றது, புடினின் படையெடுப்புக்கு எதிராக மேற்குலகிற்கு தலைமை தாங்கியது என தனது செயல்கள் குறித்து பெருமைப்படுவதாக பொரிஸ் ஜோன்சன் குறிப்பிட்டார்.

தற்போது சில நேரங்களில் இருள் சூழ்ந்திருந்தாலும், நமது எதிர்காலம் ஒன்றாக பொற்காலமானதாக உள்ளது எனவும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *