பல கிலோமீற்றர் சென்று ஊடக அறிக்கையின் மூலம் மக்களுக்கு உண்மைகளை வெளிச்சத்துக்கு கொண்டுவரும் புத்தளம் மாவட்ட ஊடகவியலாளர்களுக்கு எரிபொருள் நிலையங்களில் எரிபொருளை வழங்குமாறு கோரி புத்தளம் மாவட்ட அரசாங்க அதிபர் எச். எஸ்.எம். பீ ஹேரத்கடந்த வெள்ளிக்கிழமையன்று கடிதம் ஒன்றை வழங்கியுள்ளார்.
இதுவரையிலும் புத்தளம் மாவட்ட ஊடகவியலாளர்களுக்கான பெற்றோல் எந்த ஒரு எரிபொருள் நிலையங்களிலும் வழங்கப்படவில்லையென ஊடகவியலாளர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
இதனால் செய்தி சேகரிப்பில் ஈடுபடும் தமது ஊடகத்துறை ஸ்தம்பிதமடைந்துள்ளதாக புத்தளம் மாவட்ட ஊடகவியலாளர்கள் கவலைத் தெரிவிக்கின்றனர்.
ஊடகத்துறையும் அத்தியாவசிய சேவையாகக் கருதி உடனடியாக புத்தளம் மாவட்ட ஊடகவியலாளர்களுக்கான பெற்றோலை வழங்குமாறு செய்தி சேகரிப்பில் ஈடுபடும் ஊடகவியலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
