புகையிரத நிலைய அதிபரின் அலுவலகம் மீது தாக்குதல்!

வீட்டிற்கு செல்ல ரயில் இல்லாததால் மனமுடைந்த பயணிகள் சிலர் பாணந்துறை நிலைய அதிபரின் நடவடிக்கை அலுவலகம் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த தாக்குதலில் ஸ்டேஷன் மாஸ்டர் அலுவலகம் கடுமையாக சேதமடைந்துள்ளதுடன் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

குறைந்த எண்ணிக்கையிலான பயணிகளை ஏற்றிக்கொண்டு இரண்டு விரைவு ரயில்கள் மாத்தறை மற்றும் காலி நோக்கி ஓடிக்கொண்டிருந்தன.

மேலும் பயணிகள் குழுவொன்று ரயில் நிலைய மாஸ்டரிடம் ஏன் ரயில்களை பாணந்துறை நிலையத்தில் நிறுத்தவில்லை என்று கேட்டதையடுத்து அங்கு காரசாரமான விவாதமாக மாறியது.

அதேவேளை கோபமடைந்த பயணிகள் நிலையத்திற்குள் நுழைந்தநிலையில் குறித்த சம்பவம் இடம்பெற்றது.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *