சூதாட்ட விடுதிகளுக்குள் நுழைவதற்கும் டோக்கன்!

சூதாட்ட விடுதிகளுக்குள் நுழைவதற்காக வெளிநாட்டு முகவர்கள் ஊடாக டோக்கன் வழங்கும் முறையை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இரத்து செய்ய நிதி அமைச்சு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதேவேளை சூது விளையாட்டை விளையாடும் வெளிநாட்டவர்கள் வெளிநாட்டுப் பணத்தை இந்நாட்டில் செலவழிக்க வேண்டும் என்ற விதிகளை விதிக்கவும் நிதியமைச்சு யோசனையொன்றை முன்வைத்துள்ளது.

இலங்கையில் தங்கியிருந்து சூது விளையாடும் வெளிநாட்டவர்களுக்கு வெளிநாடுகளில் உள்ள முகவர்கள் மூலம் சிட்டைகள் வழங்கப்பட்டன.

இதன் மூலம் அவர்கள் தங்கள் சொந்த நாட்டில் பணத்தை வைப்பிட்டு , இலங்கையில் உள்ள சூதாட்ட அரங்குகளுக்குள் நுழையவும் அனுமதியளிக்கப்பட்டது.

இந்த முறைமையினால் நாட்டுக்கு கிடைக்கக் கூடிய டொலர் மற்றும் யூரோ உள்ளிட்ட வெளிநாட்டு பணம் பாரியளவில் இழக்கப்படுவதாக நிதி அமைச்சிற்கு பல குற்றச்சாட்டுக்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக அமைச்சின் சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *