
பாணந்துறை, ஜுலை 08
பாணந்துரை ரயில் நிலைய பொறுப்பதிகாரியின் அலுவலகம் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது தமக்கு வீடு நோக்கி செல்ல ரயில் கிடைக்காமை காரணமாக, ம் சில நபர்கள் ஒன்றிணைந்து ரயில் நிலைய பொறுப்பதிகாரியின் அலுவலகம் மீது கல்வீச்சுத் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
இதற்கமைய, குறித்த அலுவலகம் பாரியளவில் சேதமடைந்துள்ளது. எனினும், இதன் காரணமாக எந்தவொரு நபரும் காயமடையவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது குறைந்த எண்ணிக்கையிலான பயணிகளை ஏற்றிக்கொண்டு இரண்டு கடுகதி ரயில்கள் மாத்தறை மற்றும் காலி நோக்கி பயணித்துள்ளன.
எனினும், குறித்த ரயில்கள் பாணந்துரை ரயில் நிலையத்தில் நிறுத்தாததையடுத்து, சில நபர்கள் நிலையப் பொறுப்பதிகாரியுடன் வாய்த் தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளனர்.