உரக் கப்பல் நாளை நாட்டுக்கு வருகை

கொழும்பு, ஜுலை 08

40,000 மெற்றிக் தொன் உரங்களை ஏற்றிக்கொண்டு கப்பல் ஒன்று நாளை இரவு இலங்கையை வந்தடைய உள்ளது.

குறித்த கப்பலுக்கு மேலதிகமாக மேலும் 25,000 மெற்றிக் தொன் உரங்கள் அடுத்த இரண்டு நாட்களில் இலங்கைக்கு கிடைக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், உரக் கப்பல் நாட்டை வந்தடைந்தவுடன் எதிர்வரும் 10ஆம் திகதி முதல் உர விநியோகம் உடனடியாக ஆரம்பிக்கப்படும் என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *