இங்கிலாந்தின் தொழில்துறையில் பாரிய வீழ்ச்சி!

அதிகரித்து வரும் பணவீக்கம் மற்றும் அரசியல் குழப்பங்கள் காரணமாக இங்கிலாந்தின் தொழில்துறை வீழ்ச்சியடைந்து செல்வதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இங்கிலாந்தின் ஹெத்ரொ விமான நிலையத்தில் சுமார் 10,300 விமான சேவைகள் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும், இதற்குக் காரணம், விமான நிலைய ஊழியர்கள் பற்றாக்குறை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் கொரோனா தொற்று காரணமாக மூடப்பட்டிருந்த விமான நிலையங்கள் தற்போது கோடைகால விடுமுறைக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ள நிலையில் ஊழியர்களின் பற்றாக்குறை அதிகமாக காணப்படுவதாகவும், தொழிலுக்கு வரும் ஊழியர்களும் சம்பள அதிகரிப்பைக் கோரி வேலை நிறுத்த போராட்டங்களில் ஈடுபட்டு வருவதால் மக்களுக்கு சரியான சேவையை வழங்க முடியாது இருப்பதாக பிரித்தானிய விமான சேவை தெரிவித்துள்ளது.

விடுமுறைக்காக மக்கள் விமான நிலையத்தில் அலைமோதுகின்றதாகவும், விமான சேவைகள் இடம்பெறாததினால் மக்கள் ஏமாற்றமடைந்து காணப்படுவதாகவும் லண்டன் செய்திகள் தெரிவிக்கின்றன.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *