ரஷ்யா உக்ரைன் மீது மேற்கொண்டு வரும் ஆக்கிரமிப்பு போர் காரணமாக மிக மோசமான அழிவுகளை உக்ரைன் சந்தித்து வருகின்றது.
ஆயிரக்கணக்கில் மக்கள் உயிரிழந்து வருகின்றார்கள். நகரங்கள் மற்றும் வீடுகள் என்பன முற்றாக சேதமடைந்து அழிவுற்று காணப்படுகின்றது. மில்லியன் கணக்கிலான மக்கள் இடம்பெயர்ந்துள்ளார்கள்.
இதன் மத்தியிலும் மேற்கு நாடுகள் ரஷ்யா மீது தொடர் தடைகளை பிரயோகிப்பது மேலும் ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும். ஏனெனில் ரஷ்யா அதிக வலுவுள்ள அணு சக்தியை கொண்டுள்ள ஒரு நாடு. அதிக பொருளாதார ஸ்திரத் தன்மையை கொண்டுள்ள ஒரு நாடு. ரஷ்யா மீது தடைகளை பிரயோகிக்க முன்னர் சற்று யோசிக்க வேண்டும்.
உக்ரைனில் தற்போது ஏற்பட்டுக் கொண்டிருக்கும் இத்தனை பேரழிவுகளுக்கும் காரணம் ரஷ்யா கிடையாது.
மாறாக ரஷ்யா மீது தடைகளை பிரயோகித்த மேற்கு நாடுகள் தான் பிரதான காரணம் என ரஷ்யாவின் முன்னாள் அதிபர் டிமிட்ரி மெட்வெடேவ் தெரிவித்துள்ளார்.
பிற செய்திகள்