இலங்கையில் அடுத்த சில நாட்களுக்குள் முக்கிய அரசியல் மாற்றங்கள் ஏற்படவுள்ளன என்று அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
அதற்கான பேச்சுகள் தற்போது வெற்றிகரமாக இடம்பெற்று வருகின்றன எனவும், அரச உயர் பதவிகளில்கூட மாற்றம் இடம்பெறக்கூடும் எனவும் மேற்படி வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
சர்வகட்சி அரசொன்றை அமைப்பதற்கான பேச்சுகளை எதிரணிகள் வெற்றிகரமாக முன்னெடுத்துவரும் சூழ்நிலையிலேயே இந்த மாற்றம் இடம்பெறவுள்ளது எனவும் பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
பிற செய்திகள்