
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர், பிரபல அரசியல்வாதியின் வானத்தை நோக்கி துப்பாக்கி பிரயோகம் செய்து விட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஹொரணை பிரதேசத்தில் வீடொன்றில் நடைபெற்ற சமய நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ள சென்றிருந்த நாடாளுமன்ற உறுப்பினருக்கும், களுத்துறை மாவட்டத்தை சேர்ந்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பிரபல அரசியல்வாதி ஒருவரின் ஆதரவாளருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதன் போது நாடாளுமன்ற உறுப்பினர் வானத்தை நோக்கி துப்பாக்கி பிரயோகம் செய்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
இது தொடர்பாக வீட்டின் உரிமையாளர் பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.
துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் எவருக்கும் எந்த பாதிப்பு ஏற்படவில்லை என தெரியவருகிறது.
பிற செய்திகள்