
இன்றைய தினம் யாழில் இடம்பெற்ற பேரணியில் கலந்துகொண்ட பருத்தித்துறை – கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் பொருளாளர் பொன்சக்திவேல் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருந்தார்.
அவர் தெரிவித்ததாவது,
”அன்னமிட்டவர் நீங்கள் அன்னமிட்ட கை ,இந்த மண்ணிலே வீழ்ந்து கிடக்கும் உறவுகளுக்கு நீங்கள் கொடுத்த உணவு வயிறாற பசியாற்றியது .
அதே போன்று நாங்கள் தனித்துவமாக தொழில் புரிகின்ற இந்த கடலிலே சென்று மீன்பிடித்து எங்களை நம்பி இருப்போரை வாழ வைப்பதற்கு நீங்கள் கை கொடுக்க வேண்டும் என்று மன்றாட்டமாக வேண்டிக்கொள்கிறோம் .
எங்களுக்கு கை ,கால் இருக்கின்றது ,நெஞ்சிலே உறுதி இருக்கின்றது எங்கள் கடலில் போராடி மீன் பிடிப்போம் .உங்களது இழுவைமடி படகுகள் எங்களது வாழ்வாதார கடல் வளங்கள் அத்தனையையும் வேரோடு பிடுங்கி எறிந்து கொண்டு போகிறது.
இந்திய இழுவைமடி தொழிலினை நிரந்தரமாக நிறுத்தி எங்களது வாழ்வாதாரத்திற்கு வழி சார்க்க வேண்டும் இல்லையேல் அங்கிருக்கும் படகுகளில் உணவு கொண்டு வந்து பரிமாறி உயிரைக் காக்கின்ற வருந்தக்கூடிய நிலை வரும் .எனவே முன்கூட்டியே எங்களது வளங்களில் தொழில் செய்வதற்கு ,வாழ்வாதாரத்தினை கட்டியெழுப்பி அடுத்த சமுதாயத்துக்கு சோறு கொடுப்பதற்கு உதவ வேண்டும் என இந்திய முதல்வர் ஸ்டாலின் ஐயாவை இறுதியாக ஒன்று கேட்டுக்கொள்றோம்” என்றார்.
பிற செய்திகள்