திருகோணமலையில் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கும் மக்கள்

திருகோணமலை – தோப்பூர் இலங்கை வங்கி கிளை இன்று வெள்ளிக்கிழமை காலை 11.00 மணியளவிலே திறக்கப்பட்டமையால் வங்கிக்கு சேவை பெற காலை 8.00 மணிக்கு வருகை தந்த பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருந்து அசௌகரியங்களை எதிர் நோக்கியிருந்தனர்.

நேற்று வியாழக்கிழமையும் இதே நிலையே காணப்பட்டதாக மக்கள் கவலை தெரிவித்தனர்.

தோப்பூர் இலங்கை வங்கியில் கடமை புரிவோர் தூரப் பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர்.

தமது வாகனங்களுக்கு எரிபொருள் இல்லாமையால் இவர்கள் பஸ்ஸில் வந்து சுமார் ஒரு கிலோ மீற்றர் கால்நடையாக வங்கிக்கு வருவதால் உரிய நேரத்துக்கு இவர்களால் வங்கிக்கு வருகை தரமுடியாமல் போகின்றது.

தோப்பூரில் ATM வசதி இல்லாமையால் இங்குள்ள மக்கள் வங்கியிலே பணம் எடுக்க வேண்டும்.

இந்நிலையில் நாளை மறுதினம் ஹஜ்ஜுப் பெருநாள் கொண்டாடப்படவுள்ள நிலையில், வங்கி குறித்த நேரத்திற்கு திறக்கப்படாமல் பணம் எடுப்பதற்காக வந்தவர்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி எதையும் அவதானிக்க முடிந்தது.

அத்தோடு தூரப் பகுதியிலிருந்து வருகை தந்தோரும் கஷ்டங்களை எதிர் நோக்கியிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *