
பசறை நகரில் அமைந்துள்ள மதுபானசாலையில் இருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 8.5 லீற்றர் பெற்றோல் பசறை பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் பசறை மதுபானசாலையில் களஞ்சியப்படுத்தப்பட்டு வெளி நபர் ஒருவரினால் பெற்றோல் விற்பனை செய்யப்படுவதாக பசறை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து உடன் விரைந்து தேடுதலை மேற்கொண்ட போது 8.5 லீற்றர் பெற்றோல் மீட்கப்பட்டுள்ளதோடு மதுபானசாலை ஊழியர்களிடம் பொலிஸார் வினவியபோது பெற்றோல் உரிமையாளர் அடையாளம் காணப்பட்டார்.
இதனைத்தொடர்ந்து 33 வயதுடைய பசறை நகரைச் சேர்ந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபருக்கு எதிராக எதிர்வரும் 14 ம் திகதி பசறை நீதிவான் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பிற செய்திகள்