ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேவின் மறைவிற்கு முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இரங்கல் தெரிவித்துள்ளார்.
மஹிந்த ராஜபக்ஷ ட்விட்டர் பதிவொன்றின் மூலம் இதனைத் தெரிவித்துள்ளார்.
அந்த பதிவில், ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே இலங்கையின் ஒரு உண்மையான நண்பராக இருந்ததுடன், யுத்தத்தின் பின்னரான அபிவிருத்திக்கு அவரின் அரசாங்கம் பல்வேறு உதவிகளை வழங்கியதாக முன்னாள் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், இந்த நேரத்தில் ஷின்சோ அபேவின் குடும்பத்திற்கும், ஜப்பான் வாழ் மக்களுக்கும் தமது இரங்கலை தெரிவிப்பதாக மஹிந்த ராஜபக்ஷ தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
பிற செய்திகள்