பாடசாலைகளுக்கு தற்போது வழங்கப்பட்டுள்ள பொது விடுமுறையை எதிர்வரும் 18 ஆம் திகதி வரை நீடிப்பது தொடர்பில் கலந்துரையாடல்கள் இடம்பெறுவதாக கல்வி அமைச்சின் செயலாளர் நிஹால் ரணசிங்க தெரிவித்தார்.
எரிபொருள் இன்மையினால் ஏற்பட்டுள்ள போக்குவரத்து நெருக்கடியினால் பாடசாலைகளுக்கு கடந்த 04 ஆம் திகதி முதல் இன்றைய தினம் வரை பொது விடுமுறை வழங்கப்பட்டிருந்தது.
நெருக்கடியான சூழ்நிலையினை கருத்தில் கொண்டு இந்த விடுமுறை காலத்தினை இரண்டாம் தவணைக்குரிய விடுமுறையாக கருதி எதிர்வரும் 18 ஆம் திகதி வரை நீடிப்பதற்கான ஆலோசனைகள் இடம்பெற்று வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
எனினும் பாடசாலைகளுக்கான விடுமுறையை எதிர்வரும் 18 ஆம் திகதி வரை நீடிப்பது தொடர்பில் இதுவரை இறுதி தீர்மானம் எட்டப்படவில்லை என கல்வி அமைச்சின் செயலாளர் நிஹால் ரணசிங்க சற்று முன்னர் கெப்பிட்டல் செய்திப்பிரிவிற்கு தெரிவித்தார்.
பிற செய்திகள்