2,500 ரூபாய் படி 40 லீற்றர் டீசலை விற்பனை இளைஞன் கைது!

வவுனியாவில் 2500 ரூபாய் படி 40 லீற்றர் டீசல் எரிபொருளை விற்பனை செய்த நபர் ஒருவரை கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

இன்று (08) பிற்பகல் இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து விரைந்து செயற்பட்ட பொலிசார் வவுனியா, பட்டானிச்சூர் பகுதியில் வைத்து இளைஞர் ஒருவர் 2500 ரூபாய் படி 40 லீற்றர் டீசலை விற்பனை செய்தமையை கண்டுபிடித்துள்ளனர்.

இதனையடுத்து குறித்த நபரை கைது செய்த பொலிசார் அவரது வீட்டிலும் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையினை முன்னெடுத்திருந்தனர்.

வவுனியா, பட்டானிச்சூர் பகுதியில் வசித்து வந்த 31 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணைகளின் பின் குறித்த இளைஞரை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, வவுனியா மாவட்ட மக்கள் அமைப்பின் கோரிக்கைக்கு அமைவாக மாவட்ட அரச அதிபர் மற்றும் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் ஆகியோரின் பணிப்பில் வவுனியாவில் எரிபொருள் கறுப்பு சந்தையை கட்டுப்படுத்த பொலிசாரும், இராணுவத்தினரும் நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *