எரிபொருள் தட்டுபாடு காரணமாக நோயாளிகளை மாட்டுவண்டியில் வைத்து சிகிச்சையளிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
முல்லைத்தீவு – புதுகுடியிருப்பு பகுதியில் இன்று நோயாளர் காவு வண்டி இன்மையால், நோயாளர் ஒருவரை வைத்தியசாலைக்கு மாட்டுவண்டி ஊடாக அழைத்து சென்றுள்ளனர்.
மாட்டு வண்டியில் நோயாளருடன் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகம் வரை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் சி.சிவமோகன் சென்றுள்ளார்.

இந்நிலை தொடர்பில் கருத்து தெரிவித்த அவர்,
“இந்த நாடு முன்னேறுவதற்குரிய எந்த ஒரு அறிகுறியும் இல்லை. இப்படிப்பட்ட சிங்கள அரசாங்கத்துடன் நாங்கள் இணைந்து வாழக்கூடிய நிலை இல்லை.
மேலும், தமிழர்களை பொறுத்தமட்டில் பிரிந்து தனியாக செல்லவேண்டிய காலம் இயற்கையாகவே உருவாகிவிட்டது.
தற்போது ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி காரணமாக நோயாளர்கள் உயிரிழக்க கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.

நாங்கள் இந்த முட்டாள் தனமான அரசாங்கத்தை நம்பவில்லை. அதனால் தான் நாங்கள் எங்களுக்கு தனி ஈழம் கோரி போராட்டத்திற்கு சென்றோம். மேலும், 300 க்கும் மேற்பட்ட வெளிநாடுகளில் உள்ள தமிழ் அமைப்புகளை அரசாங்கம் தடை செய்துள்ளது.
இவ்வளவு வளங்களை வைத்து கொண்டு இன்று டொலரினை கேட்டு கெஞ்சி கொண்டிருக்கிறார்கள்”என கூறியுள்ளார்.

பிற செய்திகள்