
நாடளாவிய ரீதியில் நாளைய தினம் முன்னெடுக்கப்படும் அமைதிப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நாளை தனியார் மருத்துவ சிகிச்சையில் ஈடுபடுவதை தவிர்க்க மருத்துவ நிபுணர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.
எவ்வாறாயினும், விபத்துக்கள், பிற அறுவை சிகிச்சை, மருத்துவ அவசர நிலைகள், தனியார் துறையில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு பராமரிப்பு வழங்கல் போன்ற சேவைகளில் மாத்திரம் ஈடுபடவுள்ளதாக அச்சங்கம் தெரிவித்துள்ளது.
அரசாங்கத்தை பதவி விலகுமாறு அழுத்தம் கொடுப்பதற்காக நாடளாவிய அமைதியான எதிர்ப்புப் பிரச்சாரங்களுக்கு ஆதரவளிக்க மருத்துவ நிபுணர்கள் சங்கம் ஏற்கனவே எடுத்திருந்த தீர்மானத்தின்படி இந்த முடிவு எடுக்கப்பட்டதாக மருத்துவ நிபுணர் சங்கம் தெரிவித்துள்ளது.
அதேவேளை தனியார் மருத்துவ சேவையை நாடும் பொதுமக்களுக்கு தமது நடவடிக்கைகளால் ஏற்படும் சிரமத்திற்கு வருந்துவதாகவும் அச்சங்கம் தெரிவித்துள்ளது.
பிற செய்திகள்