
அரசாங்கத்திற்கு எதிராக நாளை பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறவுள்ளது.
இந்நிலையில், போட்டி ஆரம்பிக்கும் முன்னரே தோல்வியை ஒப்புக்கொண்டார் நந்தசேன என எதிர் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹரூப் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்ட முகநூல் பதிவில்,
நாளை மேல் மாகானத்தின் முக்கிய பகுதிகளில் ஊரடங்குநாளை இலங்கை போக்குவரத்து பஸ் ஓடாது, புகையிரதம் ஓடாது.CTB depot ஊடாக தனியார் பஸ் களுக்கான எரிபொருள் விநியோகம் இடைநிறுத்தம் என்ற செய்திகளும் வருகின்றன.
IOC ஊடாக எரிபொருள் விநியோகத்தை இடைநிறுத்தும்படி கட்டளை.போட்டி ஆரம்பிக்கும் முன்னரே தோல்வியை ஒப்புக்கொண்டார் நந்தசேன.ஆனாலும் இவ்வளவு தடைகளை தாண்டியும் நாளையை போராட்டம் நடைபெறும் என அதில் குறிப்பிட்டுள்ளார்.
பிற செய்திகள்