
மேல் மாகாணத்தின் 7 பொலிஸ் அதிகாரப் பிரிவுகளுக்கு உட்பட்ட பகுதிகளில், நேற்றிரவு 9 மணிக்கு அமுலாக்கப்பட்ட பொலிஸ் ஊரடங்கு சட்டம் இன்று(9|) காலை 8 மணியுடன் நீக்கப்பட உள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
நீர் கொழும்பு, களனி, நுகேகொடை, கல்கிஸ்ஸ, கொழும்பு – வடக்கு, தெற்கு மற்றும் மத்திய பொலிஸ் அதிகார பிரிவுகளில் நேற்றிரவு ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டது.
இந்த நிலையில், குறித்த பிரதேசங்களில் ஊரடங்கு சட்டம் இன்று காலை 8 மணியுடன் நீக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.